பொடா சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் மற்றும்மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. வைகோவின்பேச்சு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறி அவரது விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் மறைமுக ஆதரவுதெரிவித்துள்ளது.

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டன.

பொடா சட்டத்தின் 21 (3)வது பிரிவின் கீழ் வைகோ மீது வழக்குத் தொடரப்படுள்ளது. இப் பிரிவின்படி தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றமாகும். இந்தப் பிரிவை எதிர்த்துதான் வைகோ உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மூன்று வாரம் தொடர்ந்து நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி, தீர்ப்பைஒத்தி வைத்து நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

பொடா சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலைபொடா வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வெளியாகியது. இதில் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தாக்கல்செய்திருந்த மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத சக்திகளை ஆதரித்துப் பேசுவதற்கான கருத்துச் சுதந்திரத்தைஅரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தார்மீக ஆதரவுதருவது பொடா சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற அட்டார்னி ஜெனரல் சொலி சொராப்ஜியின்வாதத்தை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

வைகோ மீதான வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் பொறுப்பு பொடா சிறப்பு நீதிமன்றத்தைச் சார்ந்தது. அதில்நாங்கள் தலையிட விரும்பவில்லை.

பொடா வழக்கில் கைதானவர்கள் ஓராண்டு சிறைக்காவலுக்குப் பின், பெயிலில் செல்ல அனுமதிக்கலாம் என்றஅட்டார்னி ஜெனரலின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் பொடா மறுஆய்வுக் குழு வரும் 22ம் தேதி கூடுகிறது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்இருக்கும்போது, அதில் பொடா மறுஆய்வுக் குழு தலையிடக் கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்தமனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு பொடா குழு கேட்டிருந்தது.

மத்திய அரசின் பதில் 22ம் தேதிக்குள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வைகோவிடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+