குற்றம் நிரூபிக்கப்பட்டால், சதாமுக்கு ஜூலை 1ம் தேதி மரண தண்டனை: ஈராக் இடைக்கால அரசு
பாக்தாத்:
10 லட்சம் அப்பாவி மக்களைக் கொலை செய்ததாக ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மீது கூறப்பட்டுள்ளகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஜூலை 1ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஈராக்இடைக்கால அரசின் நிர்வாகி கூறியுள்ளார்.
சர்வதேச ஜெனீவா ஒப்பந்த அடிப்படையில், போர்க்கைதி என்ற நிலையில்தான் சதாம் மீதான விசாரணைநடத்தப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
இந் நிலையில் ஈராக்கில் நிறுவப்பட்டுள்ள இடைக்கால அரசின் நிர்வாகி மவ்பாபேக் அல் ரபீ வெளியிட்டுள்ளஅறிக்கையில், சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஜூலை 1ம் தேதி மரண தண்டனைநிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கவில்லை என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கோபி அன்னானும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்தும் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications