ஸ்பிக் பங்கு பத்திர ஊழல்: சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நாளை ஆஜர்
சென்னை:
அரசுக்குச் சொந்தமான ஸ்பிக் நிறுவன பங்குகளை அரசுக்கு நட்டம் ஏற்படும் வகையில் மிகக் குறைந்த விலையில்விற்றதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடரப்பட்ட வழக்கில் நாளை அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
1991-1996ம் ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது, தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வசமிருந்த ஸ்பிக் நிறுவனபங்குகளை அந்த நிறுவனத்திற்கே அரசு விற்றது.
இதனையடுத்து ஸ்பிக் பங்குகள் அடிமாட்டு விலைக்கு ஜெயலலிதாவால் விற்கப்பட்டதாகவும், இதனால் தமிழகஅரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி பிரச்சனை எழுப்பினார்.
இதன் பின்னர் ஜெயலலிதா, அப்போது தொழில் துறை செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர்முத்தையா ஆகியோர் மீது மத்திய புலனாய்வுத் துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டது.
விசாரணையின் முடிவில், அரசுக்கு ரூ.28.29 கோடி நட்டம் ஏற்படும் வகையில் அடிமாட்டு விலைக்கு ஸ்பிக்பங்குகளை விற்றதாக மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பு சாட்சியங்கள் மீதான குறுக்கு விசாரணை முடிந்து, கடந்த 5ம் தேதி முத்தையாவும், ராமச்சந்திரனும்நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந் நிலையில் வழக்கின் பிரதானகுற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார்.