வாக்குச் சாவடி குறைப்பு: கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் 5,000 வாக்குச் சாவடிகளைக் குறைப்பது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின்பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வாக்காளர்கள் குறைவாக உள்ள வாக்குச் சாவடிகளை, அருகில் உள்ள வாக்குச் சாவடிகளுடன்இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து சாரங்கி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று காலைஆலோசனை நடந்தது. இதில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் தம்பித்துரை,திமுக சார்பில் விடுதலை விரும்பி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டில் திருத்தப் பணிகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகள்விவாதித்தனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாரங்கி, வாக்குச் சாவடிகளின்எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் விளக்கப்பட்டது.
வாக்குச்சாவடிகளின் பட்டியல் அவர்களிடம் கொடுக்கப்படும். பின்னர் அவர்களின் கருத்து அறிந்து, மாவட்டஆட்சியர்களின் ஆய்வுக்குப் பின் எந்தெந்த வாக்குச் சாவடிகளைக் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications