For Daily Alerts
Just In
காட்டு யானைகள் மிதித்து கோவில் பூசாரி சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 3 மதம் பிடித்த யானைகளிடம் சிக்கிய கோவில் பூசாரிபரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ராமன் என்பவர் பூசாரியாகஉள்ளார். அவர் மட்டும் தனியாக காட்டுப் பகுதியில் நடமாடியபோது, 3 மதம் பிடித்த காட்டு யானைகள் அவரைசூழ்ந்து கொண்டன.
3 யானைகளிடம் சிக்கியதால் தப்ப முடியவில்லை. 3 யானைகளும் ராமனை மிதித்தும், பாறைகள் மீது தூக்கிப்போட்டு அடித்தும் கொன்றன. மதம் பிடித்த யானைகளால் கோவில் பூசாரி கொல்லப்பட்ட தகவல் அப் பகுதிகிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடலாம் என்றபயம் கிராம மக்களிடையே நிலவுகிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, December 18, 2003, 5:30 [IST]