முன்னாள் திமுக அமைச்சரின் பண்ணை வீட்டில் சோதனை
திருச்சி:
முன்னாள்திமுக அமைச்சர் புலவர் செங்குட்டுவனின் பண்ணை வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடிசோதனை நடத்தினர்.
முன்னாள் திமுக அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் ஆகியவற்றில் அடிக்கடி லஞ்சஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீதுவருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் புலவர் செங்குட்டுவன் மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதையடுத்து 2 முறை அவரதுவீடுகள், அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில், டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படை புலவர் செங்குட்டுவனின்வீடுகளில் சோதனை நடத்தி சொத்துக்களின் மதிப்பை கணக்கிட்டது.
திருச்சி மாவட்டம் வேலக்குறிச்சி, திருச்சி கருமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், உறவினர் வீடுகள்ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தினர். வேலக்குறிச்சியில் உள்ள பண்ணை வீட்டில் உள்ளவை குறித்துபோலீஸார் கணக்கிட்டனர்.












Click it and Unblock the Notifications