For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புயலில் சிக்கிய 13 கப்பல் ஊழியர்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே நடுக் கடலில் புயலில் சிக்கித் தவித்த 13 கப்பல் ஊழியர்களை சென்னையிலிருந்து சென்றசென்னை கடலோர பாதுகாப்புப் படை விமானம் பத்திரமாக மீட்டது.

எம்.வி.நந்தகவஸ் என்ற பெயருடைய அந்தக் கப்பல் நடுக் கடலில் புயலில் சிக்கியது. இதையடுத்து கப்பலிலிருந்துபடகுகள் மூலம் 13 ஊழியர்களும் தப்ப முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புயல் தாக்கிக் கொண்டிருந்தஆந்திராவை நோக்கி அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற சென்னையிலிருந்து கடலோர காவல் படையின் கப்பலான விஜயாவிரைந்தது. மேலம் கடலோர பாதுகாப்புப் படை விமானமும் விரைந்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 13ஊழியர்களையும் கடலோர பாதுகாப்புப் படை விமானம் பத்திரமாக மீட்டது. அதேபோல, நந்தகவஸ் கப்பலும்பத்திரமாக மீட்கப்பட்டு நசாமாபட்டணத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X