மதுக்கடை ஊழியர் தேர்வில் நெரிசல்: இளைஞர் கால் முறிவு
மதுரை:
மதுரையில் மதுக் கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர்கள் மத்தியில்ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு வாலிபரின் கால்கள்முறிந்தன. 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளையும் அரசே கையகப்படுத்தியுள்ளது. இந்தக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணிக்கு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்தில் தேர்வு நடந்தது.
இதையொட்டி கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில்திரண்டனர். நேர்முகத் தேர்வு நடந்த இடத்தில் போதுமான இட வசதி இல்லாததால் கூட்டத்தினரிடையே பெரும்தள்ளு முள்ளும், நெரிசலும் ஏற்பட்டது.
இதில் ஒரு வாலிபரின் மேல் கடப்பா கற்கள் விழுந்தன. இதில் அவரது இரு கால்களும் முறிந்தன. மேலும் 2பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 3 பேரும் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.