குழந்தையுடன் கோர்ட்டில் ஆஜரான ரோஜா!
சென்னை:
காசோலை மோசடி வழக்கில் கைக்குழந்தையுடன் நடிகை ரோஜா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகை ரோஜா மீது திரைப்பட பைனான்சியர் முரளிமோகன் ரெட்டி என்பவர் தொடர்ந்துள்ள காசோலை மோசடிவழக்கு சென்னை சைதாப்பேட்டை23வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு மாஜிஸ்திரேட் உமாராணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனது கைக்குழந்தையுடன் ரோஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ரோஜா தரப்பு வழக்கறிஞர்சிவா நீதிபதியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். நடிகை ரோஜா அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதால் நீண்ட நேரம் நின்று பதில் சொல்ல முடியாது.
மேலும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ரோஜா மனு தாக்கல் செய்யவுள்ளார்.எனவே வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி உமாராணி, வழக்கை வருகிற 22ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications