For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையிலிருந்து வெளியே வந்தார் ‘நக்கீரன்’ கோபால்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவையடுத்து ‘நக்கீரன்’ கோபால் இன்று காலை சென்னைமத்திய சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையிருந்து வெளிவந்த அவரை ‘நக்கீரன்’ பத்திரிக்கையாளர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன்வரவேற்றனர். பின்னர் சிறைச்சாலை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கோபால்,

எனக்கு ஜாமீன் கிடைத்துள்ளது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சிக்குக் கிடைத்துள்ள முதல் அடி.எத்தனை பொய் வழக்குகளைப் போட்டாலும், அவையனைத்தையும் வென்று காட்டி வெளிவருவோம் என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் உளவாளியை சந்தனக் கடத்தல் வீரப்பன் கொலை செய்ததில் கோபாலுக்கும்தொடர்புள்ளது எனக் கூறி தமிழக அரசு அவரைக் கைது செய்து, முதலில் இந்திய குற்றப்பிரிவு சட்டத்தின் கீழும்,பின்னர் பொடா சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தது.

கோபாலுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மனுவை, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந் நிலையில் கோபாலின் சகோதரர் குருசாமி உயர் நீதிமன்றத்தில், கோபாலைக் கைது செய்யும் போது எந்தமுறையான காரணங்களையோ, ஆவணங்களையோ போலீஸார் தாக்கல் செய்யவில்லை என்று கூறி ‘ஹேபியஸ்கார்பஸ்’ மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் நேற்றுகோபாலுக்கு ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X