திண்டுக்கல் கோர்ட்டில் நெடுமாறன் ஜாமீன் மனு தாக்கல்
திண்டுக்கல்:
திண்டுக்கல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பொடாசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் பொடா வழக்கில் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 4 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியுள்ளது. ஆனால் நெடுமாறன் மீது திண்டுக்கல் மற்றும் சென்னை ஆலந்தூர் நீதிமன்றங்களில் வழக்குகள்நிலுவையில் உள்ளதால் அவரால் உடனடியாக விடுதலையாக முடியவில்லை.
இந் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியது தொடர்பாக திண்டுக்கல் சார்பு நீதிமன்றத்தில்நெடுமாறன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜாமீன் கோரி நெடுமாறன் சார்பில் அவரது வக்கீல்கள் கணேசன்,வெள்ளைச்சாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
அதேபோல ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இரு வழக்குகளிலும் நெடுமாறனுக்குஜாமீன் கிடைத்தால் அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார். கடந்த ஒரு வருடமாக நெடுமாறன் சிறையில் வாடி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications