துரதிஷ்டமான முடிவு-- பா.ஜ.க: மகிழ்ச்சியில் காங்கிரஸ்
கோயம்புத்தூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகும் திமுகவின் முடிவு மிகவும் துரதிஷ்டவசமானது என பா.ஜ.க.கூறியுள்ளது.
கட்சியின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று காலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டியில்,
மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் கூட்டணியில்இருந்து விலகிவிட்டு, மத்திய அரசில் இருந்து அமைச்சர்களையும் வாபஸ் பெறுவது என்ற திமுகவின் முடிவுமிகவும் துரதிஷ்டவசமானது.
இதையடுத்து இனி எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து மத்தியத் தலைவர்களின் வழிகாட்டுதலுக்காகக்காத்திருக்கிறோம் என்றார்.
திமுகவுடன் உறவு தொடரும்- நக்வி
இந் நிலையில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும் தேசிய பொதுச் செயலாளருமான முக்தார் அப்பாஸ் நக்வி இன்றுடெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிக முக்கியமான, பொறுப்பான கட்சி திமுக. அக் கட்சி இன்றும் எங்களுடன்தான் உள்ளது. அதை திமுக தலைவரே இன்று குறிப்பிட்டுள்ளார். அக் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளைபேசித் தீர்ப்போம்.
திமுக விலகலால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் இல்லை. இந்த விலகலால் இருகட்சிகளுக்கும் இடையிலான உறவும் பாதிக்கப்படாது என்றார்.கருணாநிதியை சமாதானப்படுத்த முயற்சி?
இந் நிலையில் கருணாநிதியை சமாதானப்படுத்த பிரதமர் வாஜ்பாயின் சார்பில் அவரைச் சந்தித்துப் பேச பா.ஜ.க.தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருவார் என்று தெரிகிறது.
துணைப் பிரதமர் அத்வானி- முதல்வர் ஜெயலலிதா ரகசிய கூட்டணி நிலவினாலும், திமுகவுடனான கூட்டணிதொடர வேண்டும் என விரும்புகிறார் பிரதமர் வாஜ்பாய்.
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவதற்காக பா.ஜ.க. அகில இந்தியத் தலைவர்வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்வானியின் சீடரான வெங்கையா நாயுடு அளித்த பேட்டி காரணமாகவே கூட்டணியை விட்டு விலகப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இதனால் அவரது வருகையும், சமாதானமும் எந்தளவுக்கு கூட்டணி தொடரஉதவும் என்று தெரியவில்லை. அவரைச் சந்திக்க கருணாநிதி மறுத்தால், அவரது வருகை ரத்தாகலாம்.
காங்கிரஸ் மகிழ்ச்சி:
தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகும் திமுகவின் முடிவு வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் கூறியுள்ளது.
அக் கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன்மூலம் மதசார்பற்ற கட்சிகள்அனைத்தும் தமிழகத்தில் ஒரே குடையின் கீழ் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் இந்த நல்ல முடிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் திமுகவின் இந்த முடிவைவரவேற்றுள்ளார்.