For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் அருகே 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கிழவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டம் தீவட்டி அருகே தாசனூரில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 55 வயது கிழவருக்கு சேலம்மாவட்ட மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தாசானூரைச் சேர்ந்தவரின் மகள்(பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5 வது வகுப்புபடித்து வந்தாள். அந்தப் பள்ளிக்கூடம் அருகே லட்சுமணன் என்பவர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 23.08.01அன்று மிட்டாய் தருவதாகக் கூறி, சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார்.

இதனை தனது பெற்றோரிடம் அந்தச் சிறுமி கூறியதையடுத்து, தீவட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார்தெரிவிக்கப்பட்டதின் பேரில் லட்சுமணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த வந்த சேலம் மகளிர்நீதிமன்ற நீதிபதி வாசுகி, லட்சுமணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்புக்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X