திமுக விலகல் குறித்து கவலையே படாத பா.ஜ.க.
சென்னை:
திமுகவுடனான உறவு முறிந்தது குறித்து பா.ஜ.க. குறிப்பாக, அத்வானி தலைமையிலான கோஷ்டிகவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அந்த கோஷ்டியைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுகவின் மறியல் குறித்து நான் கூறிய கருத்து சாதாரணமானது, பொதுவானது. திமுகவை விமர்சிக்க வேண்டும்என்ற எண்ணத்தில் அப்படிக் கூறவில்லை. இருப்பினும், ஆட்சியில் பங்கேற்றுக் கொண்டே, அந்த ஆட்சிக்குஎதிராக போராட்டம் நடத்துவது ஆரோக்கியமானது அல்ல என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன்.
திமுக விஷயத்தில் தமிழக பா.ஜ.கவினர் சொன்ன கருத்துக்களில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி திமுகவைமீண்டும் சீண்டினார்.
அதே நேரத்தில் திமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர முன் வந்தால் வரவேற்போம். அடுத்தநாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரவே விரும்புகிறோம் என்றார்.
முன்னதாக சென்னை வந்த அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சமரசம் செய்வார் என்று முதலில்கூறப்பட்டது. ஆனால் அவர் கருணாநிதியை சந்திக்கவில்லை.
மேலும், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாய்உடனடியாக ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
எனவே, திமுகவை சாந்தப்படுத்தும் உத்தேசம் பா.ஜ.க. தலைமைக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
திமுக விஷயத்தில் பிரதமர் வாஜ்பாய்க்கு ஒரு கருத்து இருந்தாலும், இப்போது அத்வானி கோஷ்டி தான் இதில்முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
மேலும் இந்த விவகாரம் குறித்து இதுவரை பிரதமர் வாஜ்பாயோ, துணைப் பிரதமர் அத்வானியோகருணாநிதியைத் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மம்தாவுக்கு பாலுவின் பதவி:
இதற்கிடையே டி.ஆர். பாலு வகித்து வந்த சுற்றுச்சூழல்துறை, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியிடம்வழங்கப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை முடிவடைந்ததும், ஜனவரி முதல் வாரத்தில்அமைச்சரவையை மாற்ற பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
இந் நிலையில் இன்று சுற்றுச்சூழல் துறை குறித்த ஒரு அறிக்கையை பிரதமரின் உத்தரவுப்படி மம்தா பானர்ஜிமக்களவையில் தாக்கல் செய்தார். இப்போது அவர் துறை ஏதும் இல்லாத அமைச்சராக செயல்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.