வாஜ்பாய் பரிந்துரைப்படி டி.ஆர். பாலு, ராஜாவின் ராஜினாமாக்கள் ஏற்பு: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
டெல்லி:
திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் முடிவுப்படி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தனர்.
இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவற்றை ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார்.இதையடுத்து பிரதமரின் பரிந்துரைப்படி ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்புவெளியிட்டுள்ளது.
முன்னதாக டி.ஆர்.பாலுவும் ராஜாவும் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துதங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசுகையில், எங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்துவிட்டோம். நாங்கள் ராஜினாமா செய்தது குறித்து பிரதமர் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். ஏன் முன்பே தமிழகபாஜகவுடனான பிரச்சனைகளை என் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று கேட்டார்.
திமுக தலைவர் கருணாநிதி இந்தப் பிரச்சனையை அவ்வப்போது கிளப்பியதை சுட்டிக் காட்டினோம். இனிமேல்பிரச்சினைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தருவோம் என்று கூறிவிட்டுத் திரும்பினோம் என்றார்.












Click it and Unblock the Notifications