மூடுபனி: டெல்லி சென்ற விமானங்கள் சென்னை திரும்பின
சென்னை:
டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற சென்னை விமானங்கள் அங்கு நிலவிய கடும் மூடுபனி (fog) காரணமாகதரையிங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தன.
தலைநகர் டெல்லியில் கடும் மூடுபனி நலவி வருகிறது. இதனால் காலை 10 மணி வரை சில அடி தூரத்தில்நிற்பவர்களைக் கூட காண முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுகிறது.
இதனால் டெல்லியில் வாகன, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற 3 விமானங்கள், கடும் மூடுபனிகாரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டன.
சென்னையிலிருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டு அங்குதரையிறக்கப்பட்டது. அதே போல டெல்லியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications