பாளை. சிறையிலிருந்து தப்பிய கைதி பிடிபட்டார்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து தப்பியோடிய கைதிகளில் ஒருவரை போலீஸார்பிடித்துள்ளனர்.
பாளையங்கோட்டை சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 6 ஆயுள் தண்டனைக் கைதிகள் சுரங்கம்அமைத்து தப்பியோடினர். தப்பியோடும்போது 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் சுற்றுச்சுவரில் உள்ள மின் வேலியில்பாய்ந்த மின்சாரம் தாக்கி இறந்தார்.
மற்ற 3 பேரையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் படைகளின் தீவிர வேட்டையில் மூர்த்திஎன்ற கைதி பிடிபட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற கிராமத்தில் பதுங்கியிருந்தபோது மூர்த்தி பிடிபட்டார். தலைமறைவாக உள்ளதாமஸ் மற்றும் சாம்ராஜ் ஆகிய இரு ஆயுள் தண்டனைக் கைதிகளையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications