For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜனனி மீதான குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைப்பு
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுப் பதிவு செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.
கஞ்சா கடத்தியதாகக் கூறி நடராஜனின் தோழி ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந் நிலையில் இன்று ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வரவில்லை. இதையடுத்து இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, December 22, 2003, 5:30 [IST]