தொடருமா பா.ஜ.க. கூட்டணி?: 24ம் தேதி பா.ம.க. முடிவு, 25ல் மதிமுக
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் திமுக விலகியுள்ள சூழ்நிலையில்பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது.
அதே போல இன்று நடப்பதாக இருந்த மதிமுக உயர் மட்டக் கூட்டம் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும் பாட்டாளி மக்கள் கட்சி விலகாது என்றேதெரிகிறது.
அதேசமயம், கூட்டணியில் அதிமுகவை சேர்க்கக் கூடாது என்று பா.ஜ.க.வுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம்நிறைவேற்ற அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அக் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள்செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் தொடர்ந்து சந்தித்து ஆலோசித்தவண்ணம் உள்ளனர். இதில்கண்ணப்பன் போன்றவர்களுக்கு கூட்டணியில் இருந்து விலக விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் 24ம் தேதி சென்னையில் கட்சியின் உயர் மட்டக் குழுவை கூட்டுமாறு அவர்களிடம் வைகோகூறியுள்ளார்.
அன்றைய தினம் தனது முடிவை வைகோ அறிவிப்பார்.