For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ: இன்று மீண்டும் கூடுகிறது பொடா மறு ஆய்வுக் குழு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு விசாரிப்பதற்கு தமிழக அரசுதெரிவித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து இன்று கூடும் பொடா மறு ஆய்வுக் குழு வைகோ விஷயத்தில் முக்கிய முடிவை எடுக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி சகாரியா தலைமையிலான பொடா மறுஆய்வுக் குழு, பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைதுசெய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்வழக்கை பொடா மறுஆய்வுக் குழு விசாரிப்பது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதாக இருக்கும் என்றுதமிழக அரசு தனது ஆட்சேபத்தை அக் குழுவிடம் தெரிவித்தது.

இது தொடர்பாக தனது விளக்கத்தை அளிக்குமாறு மத்திய அரசை பொடா மறுஆய்வுக் குழு கேட்டிருந்தது.இதையடுத்து மத்திய அரசு தனது விளக்க மனுவை அளித்துள்ளது.

அதில், பொடா வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தாலும், பொடா மறு ஆய்வுக் குழு வழக்கு குறித்துமுடிவெடுத்தால் அது செல்லுபடியாகும் என்று பொடா சட்டத்தில் மத்திய அரசு கடந்த வாரம் திருத்தம் கொண்டுவந்திருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு வாய்மொழி ஆதரவு அளிப்பது பொடா சட்டத்தின் கீழ்குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை பொடா மறு ஆய்வுக் குழு கூடுவதாக இருந்தது. ஆனால், மும்பையில் இருந்துகிளம்பிய குழுவின் தலைவர் சகார்யா வந்த விமானம் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் தரையிறங்கமுடியவில்லை.

இதையடுத்து அந்த விமானம் திரும்பிவிட்டது. இதையடுத்து இக் கூட்டம் பிற்பகலுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்துள்ள விளக்கம், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பு ஆகியவை குறித்துஆலோசிக்கப்பட்டு வைகோ விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிசிஐடி அலுவலகத்தில் கோபால் கையெழுத்து

பொடாவில் கைதாகி ஜாமீன் பெற்ற நக்கீரன் ஆசிரியர் கோபால், இன்று சிபிசிஐடி தலைமை அலுவலகம் மற்றும்பூந்தமல்லி பொடா நீதிமன்றம் ஆகியவற்றில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.

கோபாலுக்கு ராஜாமணி என்பவரின் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது.அதன்படி தினசரி காலை 10 மணிக்கும் மாலை 5 மணிக்கும், சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமைஅலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

இதேபோல,பொடா வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைப்படி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வாரத்தின்முதல்நாள் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X