மீண்டும் செப்டம்பர் 11: அமெரிக்காவில் பாதுகாப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவில் அல் கொய்தா மீண்டும் பயங்கரத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந் நாடுஎச்சரித்துள்ளது.
நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் போலவோ அல்லது அதை விட பயங்கரமான தாக்குதலாகவே இதுஇருக்கலாம் என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் டாம் ரிட்ஜ் எச்சரித்துள்ளார்.
கடந்த முறை போலவே, இம்முறையும் தாக்குதலுக்கு விமானங்களைப் பயன்படுத்தக் கூடும் என செய்திகள்வந்துள்ளதால் விமான நிலையங்களிலும், பாலங்கள், அணைகள், உயரமான கட்டடங்கள், அணுமின் நிலையங்கள்மற்றும் முக்கிய தொழிற்சாலைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல வளைகுடா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும்படிஎச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எந்த வகையிலும் தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications