ஐ.ஜியின் ஜீப் மோதி 6 வயது சிறுவன் சாவு
சென்னை:
சென்னை காவல்துறை ஐ.ஜி ஷியாம் சுந்தரின் ஜீப் மோதி ஒரு குடும்பமே படுகாயம் அடைந்தது. இதில் 6 வயதுசிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஐ.ஜி. ஷியாம் சுந்தரின் கார் டிரைவர் பிரைட் ஐசக் சாமிநாதன். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரைட்ஆயுதப் படை டிரைவர் ஆவார். ஷியாம் சுந்தரை பணியிலிருந்து அவரது வீட்டில் விட்டு விட்டு ஜீப்பில் தான்தங்கியிருந்த கொரட்டூருக்கு சென்றார்.
அங்கு சென்ற பின்னர் அவரது நண்பர் செல்வம் என்பவர், போலீஸ் ஜீப்பை ஓட்டிப் பார்க்கட்டுமா என்றுகூறியுள்ளார். அதற்கென்ன நானே ஓட்டக் கற்றுத் தருகிறேன் என்று கூறிய பிரைட், செல்வத்திடம் ஜீப்பைக்கொடுத்து விட்டு அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஓட்ட ஆரம்பித்த செல்வம், மெதுவாக முக்கிய சாலைக்கு வந்துள்ளார்.அப்போது ஜீப் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதில் சாலையோரம்சென்று கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ், அவரது மைத்துனி ஹேமலதா, உறவுக்கார சிறுவன் நவீன் ராஜ் (வயது 6),விஜயலட்சுமி ஆகியோர் காயமடைந்தனர்.
அனைவரும் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நவீன் ராஜ்சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். மற்றவர்களுக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும், பிரைட் ஐசக் சாமிநாதனை போலீஸ் நிலையத்தில் சரணடையும்படி ஐ.ஜி.ஷியாம் சுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்தார் பிரைட். தலைமறைவாகி விட்டஅவரது நண்பர் செல்வத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications