எம்ஜிஆர் சமாதியில் பா.ஜ.க அஞ்சலி: அதிமுக கூட்டணிக்கு முயற்சி?
சென்னை:
எம்.ஜி.ஆரின் நினைவு தினமான நாளை, அவரது சமாதியில் பா.ஜ.க சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முதல்படியே என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எம்.ஜி.ஆருக்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாளை காலை அதிமுக சார்பில் ஜெயலலிதா தனது கட்சியினருடன் எம்.ஜி.ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இந் நிலையில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்களும் நாளை எம்.ஜி.ஆருக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று திருநாவுக்கரசரின் உதவியாளர் சத்தியமூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் காலத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதற்காக இதற்கு முன் திருநாவுக்கரசர் மட்டும் அஞ்சலி செலுத்தி வந்தார்.
இந்த வருடம் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications