தனியாருக்கு பேருந்து வழித் தடங்கள்: அரசு இன்று முக்கிய ஆலோசனை
சென்னை:
தனியாருக்கு விற்கப்படும் பஸ் வழித்தடங்கள் எவை என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று ஆலோசனை நடத்தினார்.
போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதால், அவற்றை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்தது. அதன் முதல் கட்டமாக 40 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு விற்பது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்டந்தோறும் நஷ்டத்தில் இயங்கும் பஸ் வழித்தடங்களை கண்டறிவதற்காக உள்துறை செயலாளர் சையதத் முனீர் ஹோதா தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்ட நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் இன்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை கோட்டையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எந்தெந்த வழித் தடங்களை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications