For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

35 தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை,நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 35 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் சில மாதங்களுக்கு முன்பு 35 மீனவர்கள் பிடித்துச்செல்லப்பட்டனர். புதுக்கோட்டை, ராமேஸ்வரம், நாகை ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

யாழ்ப்பாணத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையிடம்ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

யாழ்ப்பாணம் சிறையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. சிறை அதிகாரிகள்தங்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டவும், அடிக்கவும் செய்தனர். சிறையில் தாங்கள் மிகவும்கஷ்டப்பட்டதாகவும் மீண்டு வந்த மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X