சுயமரியாதையை சோதித்தது பா.ஜ.க: கருணாநிதி
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர்கள், திமுகவின் சுயமரியாதைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டதால்தான்கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முரசொலி நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், திமுக தலைவர்கள் குறித்தும், திமுகவின்கொள்கைகள் குறித்தும் சில பா.ஜ.க தலைவர்கள் குறிப்பாக தமிழக பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்தும், கேலிசெய்தும், அவமானப்படுத்தியும் வந்த காரணத்தால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகநேரிட்டது.
இந்த முடிவு முன்பே எடுக்கப்பட்ட ஒன்று. ஆனால் முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையிலும்,அமெரிக்காவிலுமாக மாறி மாறி சிகிச்சை பெற்று வந்த காரணத்தால் முடிவை சற்றுத் தள்ளிப் போடவேண்டியதாயிற்று. இல்லையெனில் முன்பே நாங்கள் விலகியிருப்போம்.
ராஜினாமா செய்க என்றவுடன் எந்தவித முணுமுணுப்பும் இன்றி, பீடு நடை போட்டு டெல்லி சென்றனர்டி.ஆர்.பாலுவும், ராஜாவும். மாறன் உயிரோடிருந்திருந்தால், பா.ஜ.க. தலைவர்களின் நடவடிக்கையைக்கண்டித்திருப்பதோடு இன்னும் நாகரிகத்தோடு கூட்டணியிலிருந்து விலகியிருப்பார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று சில தலைவர்கள் பகல் கனவுகண்டு கூறி வருகிறார்கள். மக்கள் சேவையாற்ற பதவியையோ, அதிகாரத்தையோ திமுக என்றுமே எண்ணிப்பார்த்ததில்லை. கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சி திமுக. கொள்கையை மதிப்பவர்கள் திமுகவினர்என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications