சென்னை அருகே வாலிபர் கொடூர கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ஆவடியில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார்.
சென்னை ஆவடி அருகே உள்ளது வீராபுரம். பொட்டல் காடுகள் நிறைந்த இந்தப் பகுதியில் உள்ள ஒரு புதரிலிருந்து வாலிபர் ஒருவரின் கருகிய பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
30 வயது நிறைந்த அந்த வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடலின் அனைத்துப் பகுதிகளும் கொடூரமாக வெட்டப்பட்டிருந்தன. பெட்ரோல் ஊற்றி அவரது பிணம் எரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வீராபுரம் சரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications