சென்னை அருகே மீண்டும் புயல் சின்னம்
சென்னை:
சென்னைக்கு அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் (புயல் சின்னம்) உருவாகியுள்ளதால் நேற்றுஇரவு முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிநிலையம் கூறியுள்ளது.
இந்த புயல் சின்னம் சென்னை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாகவும், ஆனால் மிகவும் பலவீனமாக புயல்சின்னம் இருப்பதால் சென்னை நகரில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யவே வாய்ப்பு உள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் லேசான மழைபெய்து வருகிறது. இன்று அதிகாலை கடும் பனியுடன், நல்ல மழையும் சேர்ந்து பெய்ததால், சென்னை மக்கள்குளிரில் தவிக்க நேரிட்டது.
இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும் வாய்ப்புஉள்ளதாகவும், பகல் நேரங்களில் மேகமூட்டமாகவும், லேசான தூறலும் இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சென்னையைத் தாக்கவிருந்த புயல் பாதை மாறி ஆந்திராவில் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.