தமிழகத்தில் உயிருக்கு ஆபத்து: இசட் பிரிவு பாதுகாப்பு தொடர டி.ஆர்.பாலு கோரிக்கை
சென்னை:
மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும் கூட, தமிழகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்,தொடர்ந்து இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர்வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழு முடிவுப்படி, தங்களது அமைச்சர் பதவிகளை டி.ஆர்.பாலுவும், ராஜாவும்சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந் நிலையில் பிரமதர் வாஜ்பாய்க்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடந்த 2001ம் ஆண்டு என் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இசட் பிரிவுபாதுகாப்பு கொடுக்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையிலும், எனதுஉயிருக்கு தொடர்ந்து ஆபத்தும், அச்சுறுத்தலும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் பகைமையுடனும், பழி வாங்கும்உணர்வுடனும் உள்ளதால் எனது இசட் பிரிவு பாதுகாப்பை தொடர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் சென்னைகாவல்துறையினரால் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியில் இருந்தபோதே கைது நடவடிக்கையில் இறங்கிய அதிமுக அரசு, தற்போது பதவியில் இல்லாத நிலையில்என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் நிலவுவதால், இசட் பிரிவு பாதுகாப்பு தொடர வேண்டும் என்றுடி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications