இன்று தனுஷ்கோடி அழிந்த நாள்!
சென்னை:
39 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அடுத்துள்ளதனுஷ்கோடி, புயலால் தாக்கப்பட்டு உருக்குலைந்து போனது.
அது 1964ம் ஆண்டு. டிசம்பர் மாதம் 22ம் தேதி நள்ளிரவிலிருந்தே ராமேஸ்வரத்தையும், தனுஷ்கோடியையும்புயல் தாக்கத் தொடங்கியது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த புயல் காற்றால் ராமேஸ்வரம்,தனுஷ்கோடியும் படாதபாடு பட்டன.
ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடிதான் அதிகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தனுஷ்கோடி துறைமுகமும், நகரும்,20 அடிக்கும் மேலாக எழுந்த கடல் அலைகளால் விழுங்கப்பட்டன. கடல் நீர் நகருக்குள் புகுந்து அங்கிருந்தஉயிர்களையும், கட்டடங்களையும் அழித்தொழித்தது.
வீடுகள், அரசு அலுவலகங்கள்,ரயில் நிலையம், துறைமுக அலுவலகம் என அனைத்துமே காணாமல் போயின.நகரின் ஒரு கிலோமீட்டர் தொலைவிலான பகுதி சில மணி நேரங்களில் கடல் அலைகளுக்கு இரையாகி விட்டது.நூற்றுகணக்கான உயிர்களும் பலியாயின.
பாம்பனிலிருந்து வந்த ரயில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.ஆனால் புயலின் கோரப்பசிக்கு ரயிலும் கடலுக்குள் இழுக்கப்பட்டு ஏராளாமான பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
புயல் ஓய்ந்து முடிந்தபோது தனுஷ்கோடி அங்கு இல்லை. மாறாக, தபால் நிலையம், ரயில் நிலையம், கிறிஸ்தவபேராலயம் ஆகியவற்றின் சில மிச்சங்கள் மட்டுமே அங்கு காணப்பட்டன.
தனுஷ்கோடியை விட்டு பின்னர் மக்கள் ராமேஸ்வரத்திற்கும், பாம்பனுக்கும் குடி பெயர்ந்து போய் விட்டனர்.ஆனால் இன்னும் கூட சிலர் தொடர்ந்து தனுஷ்கோடியிலேயே வசிக்கிறார்கள்- புயல் தாக்கிய சோகநினைவுகளோடு.












Click it and Unblock the Notifications