ஜெ. வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தயார்: கர்நாடகம்
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் பெங்களூர்சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் சந்திரே கெளடாதெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு நீதிமன்றம் அமைத்திருக்கிறோம்.வழக்கை விசாரிக்க நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் துணை வழக்கறிஞர் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துதலைமை நீதிபதி ஜெயினிடம் பரிந்துரைத்துள்ளோம்.
பெங்களூரில் இருந்து வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் பதிலைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது. எங்கள் பதிலை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம்.
அதில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளோம்.மேலும் பெங்களூரில் ஜெயலலிதாவின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் என்பதையும், பாதுகாப்புவிஷயத்தில் ஜெயலலிதா பயப்பட வேண்டியதே இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.
இந்த நீதிமன்றத்தை அமைப்பதில் கர்நாடக அரசு தடுமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் அமைக்கப்படும்முன்பே அதை பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுவிட்டார்ஜெயலலிதா.