மாறன் வீடு அரசிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சராக இருந்து சமீபத்தில் மரணமடைந்த முரசொலி மாறன் வசித்த டெல்லி வீடு, மத்திய அரசிடம்ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க் பகுதியில் உள்ள 8ம் எண் வீட்டில் முரசொலி மாறன் வசித்து வந்தார். அவரதுமறைவையடுத்து அந்த வீட்டை மாறன் குடும்பத்தினர் காலி செய்து விட்டனர்.
மாறனின் மனைவி மல்லிகா டெல்லி சென்று வீட்டை காலி செய்த பின்னர் வீட்டுச் சாவியை, மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பத்திரமாக அதிகாரிகளிடம்வழங்கினார்.
பதவி போன பிறகும் பலர் அரசு வீட்டை தொடர்ந்து காலி செய்யாமல் வைத்திருக்கும் நிலையில் மாறன் இறந்துஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் அவர் வசித்து வந்த வீடு அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications