நாடாளுமன்றத்தில் பெரியார் சிலை நிறுவ அனுமதி
டெல்லி:
நாடாளுமன்ற வளாகத்தில் பெரியார் சிலை அமைக்க இணைக்குழு அனுமதியளித்துள்ளது.
தந்தை பெரியாரின் 125வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் பெரியாரின் சிலையைவைக்க அனுமதி கோரி, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் மோகன் கடிதம் எழுதியருந்தார்.
அதற்கு தேசியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப் படங்கள் மற்றும் சிலைகள்நிறுவுவதற்கான இணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மக்களவைச் செயலகம் மோகனுக்குகடிதம் எழுதியுள்ளது. அக் கடிதத்தில் சிலையை அளிக்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலை எந்த இடத்தில், எப்போது அமைக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திதான் முதலில் இது குறித்து மத்திய அரசுக்கு 1999ம் ஆண்டு கடிதம்எழுதியிருந்தார். அதனையடுத்து இணைக்குழு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. பின்னர் பெரியார் சிலையைதமிழக அரசு நன்கொடையாக வழங்க முன்வந்தது.
இந் நிலையில், தந்தை பெரியாரின் 125வது பிறந்த நாளையொட்டி மும்பை தாராவியில் பெரியார் சிலைஅமைக்க மும்பை நகர திமுக முடிவு செய்துள்ளது.
பெரியார் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
பெரியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தலைவர்கள் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தனர். இந் நிலையில் சென்னை அருகே பொன்னேரியில் திமுக சார்பில் முன்னாள்அமைச்சர் சுந்தரம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கும்போது, சுந்தரம் கால் தடுமாறி கீழே விழுந்தார். அவரைப் பிடிக்க முயன்றமீஞ்சூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரமும் கீழே விழுந்தார். இதில் சுந்தரத்தின் காலில் எழும்பு முறிவுஏற்பட்டது. இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் இருவரும்வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications