சரவண பவன் ராஜகோபால் ஜாமீன் கோரி மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் ராஜகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கு, ஜீவஜோதியை கடத்தியதாக கூறப்படும் வழக்குஆகியவற்றில் சம்பந்தப்பட்டுள்ள ராஜகோபால் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் தாக்கல் செய்துள்ள மனுவில், என் மீதான வழக்குபூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முக்கிய சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டுவிட்டனர்.
இப்போது என்னை ஜாமீனில் விடுதலை செய்தால், அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுவதுபோல், நான் சாட்சிகளைக்கலைக்க முடியாது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications