கருணாநிதி மீதான டெஸ்மா வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்டவழக்கின் விசாரணை வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன், காங்கிரஸ்முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அரசுடெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி கருணாநிதி சார்பில்மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக இன்றைக்குள் பதில் அளிக்குமாறு அரசுத் தரப்புவழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று நீதிமன்றம் கூடியபோது, நீதிபதி விடுமுறையில் சென்றிருந்ததால், 2-வது குற்றவியல் நீதிபதிராஜசேகர் விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு பதிலை அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு அரசுவழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வருகிற 30ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறி வழக்கைநீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications