இது கலி காலம்: கழிப்பறையில் வீசப்பட்டது சிசு: தாய்க்கு வயது 15!!!
சேலம்:
சேலம் அருகே கிச்சிப்பாளையம் என்ற இடத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கழிப்பறையில் வீசப்பட்டது. அந்தக் குழந்தையின் தாய்க்கு வயது 15 தான் ஆகிறது என்ற தகவல் போலீஸாரையும் அப் பகுதியினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கிச்சிலிப்பாளையம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அழகான ஆண் சிசு கிடப்பதைப் பார்த்த அதிர்ந்தனர்.
தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்ததால், உடலெங்கும் ரத்தமும் ஈரமுமாய் அந்த சிசு பரிதாபமாய் கதறிக் கொண்டிருந்தது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது 15 வயதான சிறுமி பிடிபடடாள். அச் சிறுமி தான் குழந்தையின் தாய் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தபோது அப் பகுதியினர் மட்டுமின்றி போலீசாரும் அதிர்ந்து போய்விட்டனர்.
தவறான முறையில் குழந்தை உருவானதால் அதை கழிப்பறையில் வீசி விட்டதாக அச் சிறுமி அழுது கொண்டே கூற அவளைத் திட்டுவதா, தேற்றுவதா என்று தெரியாமல் போலீசார் கலங்கி நின்றனர்.
பின்னர்அந்த 15 வயது தாயை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications