எங்க கதவும் திறந்தே இருக்கு: பா.ஜ.க
சென்னை:
கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று முடிவு எடுத்து விலகிவிட்டு, இப்போது அதற்கான காரணங்களைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறது திமுக என பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கொள்கையுடன் ஒத்து வருகிற கட்சியோடு (அதிமுக?) கூட்டணிஅமைக்கத் தயாராக இருக்கிறோம். எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன.
வாஜ்பாயை அடுத்த பிரதமராக ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் கூட்டணி சேர வரலாம். இதுவரை நாங்கள்அதிமுக, திமுகவுடன் சம தூரத்தில் விலகி இருக்கிறோம். எங்களுடன் கூட்டணி சேர்ந்தவர்களால் தான் தேர்தலில்வெல்ல முடியும். கடந்த இரு தேர்தல்களிலும் அது தான் நடந்தது.
கூட்டணியில் இருந்து விலகிய திமுக சொல்லும் காரணங்கள் சரியானவை அல்ல. விலக வேண்டும் என்று முதலில்முடிவு செய்து விலகினார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு காரணமாக தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க கூட்டணியில் தொடருவது என்ற பா.ம.கவின் முடிவை வரவேற்கிறோம். மதிமுகவும் இதே போன்ற முடிவைஎடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் வாஜ்பாயை பா.ம.க. குற்றம் சொல்வது தேவையற்றது. காவிரி ஆணையத்தை அமைக்கமுயற்சி எடுத்தே வாஜ்பாய் தான் என்பதை மறக்கக் கூடாது. பா.ம.கவும் பா.ஜ.கவும் கொள்கைரீதியில் இணைந்துபோகும் கட்சிகள் அல்ல என்றாலும் எங்களுக்கும் இதுவரை நெருடல் ஏதும் இல்லை.
ஆனால், காவிரி விஷயத்தில் டாக்டர் ராமதாசின் குற்றச்சாட்டை மறுக்கிறோம். தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். ஆனால் காவிரி தொடர்பாக கட்சிகளுக்கு இடையே பெரும் வேறுபாடுநிலவுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது.
காவிரி ஆணையத்தை அமைத்த வாஜ்பாயால் தான் தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட்டன.
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவும் வலியுறுத்தியுள்ளது. எனவே, இதில்பா.ஜ.க. மீது பா.ம.க. பழி போடுவதும் சரியல்ல என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications