மின்சார ரீடிங் எடுக்க ஓய்வு பெற்ற ஊழியர்கள் நியமனம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீடுகளில் மின்சார அளவைக் கணக்கிடும் ரீடிங் பணிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களைப் பயன்படுத்ததமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு கூடுதல் பணி கொடுக்கப்படுவதால், வேலைப் பளு அதிகமாகி உள்ளது.இதனால் வீடுகளில் மின்சார அளவைக் கணக்கிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார அளவு கணக்கிடப்பட வேண்டும். ஆனால் பல பகுதிகளில் பலமாதங்களாக ரீடிங் எடுக்கப்படுவதே இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து மின்சார ரீடிங் எடுக்கும் பணியில் ஒய்வு பெற்ற மின் வாரிய ஊழியர்களை நியமிக்க மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகளுக்குச் சென்று மின்சார அளவை கணக்கிட்டு வாரிய பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டியது இவர்களது வேலையாகும். ஒரு வீட்டுக்கு ரூ. 3 என்ற விகிதத்தில் இவர்களுக்கு ஊதியம்அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications