பறிமுதலான படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர் குழு திரும்பியது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
பாக். ஜலசந்தி அருகே இலங்கை கடற்படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 8 படகுகளை மீட்க இலங்கைசென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் குழு 6 படகுகளுடன் திரும்பியது.
சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர்மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். அவர்களது இயந்திரப் படகுகள் இலங்கையில் பறிமுதல்செய்யப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளை மீட்டு வருவதற்காக கடந்த 22ம் தேதி43 பேர் கொண்ட மீனவர் குழுஇலங்கை விரைந்தது. அங்கு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மீனவர்களிடம் 8 படகுகளும் கொடுக்கப்பட்டன.அதில் 2 படகுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருந்தன. இதையடுத்து 6 படகுகளுடன்ராமேஸ்வரம் மீனவர்கள் ஊர் திரும்பி வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications