For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை உயர் நீதிமன்ற கிளை: 3 மாதத்தில் ரெடியாகும்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளை கட்டுமானப் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முழுமையாகநிறைவு பெற்று இயங்கத் தொடங்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மதுரைக்கு வந்திருந்தார். உலகநேரியில் கட்டப்பட்டு வரும் உயர்நீதிமன்றக் கிளை கட்டடப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டடப் பணிகள் மிகவும் திருப்திகரமான வகையில் நடந்துவருகின்றன. கட்டடம் எழிலுற அமைந்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் முடிவடையும் என்றுதெகிறது. அதன் பிறகு உயர் நீதிமன்றக் கிளை தனது பணியை தொடங்கும் என்றார் அவர்.

மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளை வரும் பொங்கல் தினத்தன்று திறக்கப்படுவதாக முன்புஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று, கட்டுமானப் பணிகளில் ஊழல் நடந்து விட்டதாகக் கூறி புகார்எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் அப்படியே தேக்கமடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X