For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரான் நிலநடுக்கம்: 25,000 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

தெஹ்ரான்:

தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 25,000 பேராவதுஇறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாம் நகரில் நேற்று காலை 5.28 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 எனபதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஏறத்தாழ 5,000 பேர் சம்பவம் நேர்ந்த பொழுதில் இறந்தனர் என்றும்,குறைந்தது 20,000 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் கெர்மன் மருத்துவக் குழுவைச் சேர்ந்தஇராஜ் ஷரிபி என்பவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஈரான் தொலைக்காட்சி 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 350 பேர் இறந்துள்ளனர் என்றும், பாம் நகரைச் சுற்றியுள்ள,பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எந்த ஒரு மீட்புக் குழுவும் இதுவரை செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி, உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிய 12 மோப்ப நாய்கள் பாம்நகருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கெர்மன் நகரை வந்தடைந்த சுவிஸர்லாந்து நாட்டு மீட்புக் குழுவினரும் பாம்நகருக்கு விரைந்துள்ளனர். அந்தக் குழுவில் மோப்ப நாய்களும் இருக்கின்றன.

இதற்கிடையே மீட்புக் குழு அதிகாரிகளுள் ஒருவரான முகம்மது ஜஹான்ஷகி என்பவர், சடலங்களைக் கட்டிஅனுப்புவதற்கு பைகள் தேவைப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையில் உள்ளதால்,அதே எண்ணிக்கையில் பைகளும் உடனடியாகத் தேவை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X