For Daily Alerts
Just In
ஈரோட்டுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்!
சென்னை:
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட விவசாயிகளின்கோரிக்கையை ஏற்று அப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தற்போது மேட்டூர் அணையைதிறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் கால்வாயின் கிழக்கு மற்றும் மேற்குகரை கால்வாய்களை 15 நாட்களுக்குத் திறந்து விடும்படியும், கிழக்குக்கால்வாயில் 350 கன அடியும், கிழக்குக் கரையில் 250 கன அடியும் திறந்து விடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மொத்தம், 45,000 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தத் தண்ணீரால் பலனடையும்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, December 26, 2003, 5:30 [IST]