For Daily Alerts
Just In
காவிரியில் அடித்துச் செல்லப்பட்டார் கல்லூரி மாணவர்: இருவர் மீட்பு
சேலம்:
கிறிஸ்துமஸ் விடுமுறையில் காவிரியில் குளிக்கச் சென்ற 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 2 பேர்மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் அருகே உள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிமாணவர்கள் 3 பேர் ஜேடர்பாளையம் வந்துள்ளனர்.
சிறிதுநேரம் அந்த அணையைச் சுற்றிப் பார்த்த அவர்கள் பின்பு இறங்கி குளித்தனர். அப்போது வெள்ளத்தில்அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த பரிசல் துறையைச் சேர்ந்த சிலர் நீரில் குதித்து 2 பேரைக்காப்பாற்றினர். மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்.
அவரது பெயர் செல்வராஜ் (20) என்றும் சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, December 26, 2003, 5:30 [IST]