காவிரியில் அடித்துச் செல்லப்பட்டார் கல்லூரி மாணவர்: இருவர் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
கிறிஸ்துமஸ் விடுமுறையில் காவிரியில் குளிக்கச் சென்ற 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 2 பேர்மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் அருகே உள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிமாணவர்கள் 3 பேர் ஜேடர்பாளையம் வந்துள்ளனர்.
சிறிதுநேரம் அந்த அணையைச் சுற்றிப் பார்த்த அவர்கள் பின்பு இறங்கி குளித்தனர். அப்போது வெள்ளத்தில்அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த பரிசல் துறையைச் சேர்ந்த சிலர் நீரில் குதித்து 2 பேரைக்காப்பாற்றினர். மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்.
அவரது பெயர் செல்வராஜ் (20) என்றும் சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications