30 பேரிடம் ரூ. 24 லட்சம் சுருட்டிய தம்பதி தலைமறைவு!
சென்னை:
சீட்டுப் பிடிப்பதாகக் கூறி 30 பேரிடம் ரூ. 24 லட்சம் வரை சுருட்டிய கணவனும், மனைவியும் தங்களது வீட்டைவிற்று விட்டு தலைமறைவாகி விட்டனர்.
சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அய்யனார். இவரது மனைவி சந்திரா. ஆறுஆண்டுகளுக்கு முன்பு இப் பகுதிக்கு வந்த இருவரும் அங்கேயே வீடு வாங்கிக் குடியேறினர்.
அய்யனார் மளிகைக் கடை வைத்தார். அவரும், அவரது மனைவியும் அப் பகுதியில் உள்ள பெண்களின்நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொண்டனர். பின்னர் சீட்டுப் பிடிக்கப் போவதாகக் கூறி அவர்களிடம்பணம் வசூல் செய்யத் தொடங்கினர்.
இப்படியாக ஒவ்வொருவரிடம் தலா ரூ. 30,000 முதல் ரூ. 2 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட 24 மாதம் வரை பணத்தை வசூல் செய்துள்ளனர்.
இந் நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அய்யனாரும் அவரது மனைவியும் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் அய்யனாரின் வீட்டை வேறு ஒருவர்விலைக்கு வாங்கி விட்டதாகத் தகவல் வெளியானபோதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அப் பகுதி மக்கள்உணர்ந்தனர்.
இது குறித்து எழும்பூரில் உள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஏமாற்றப்பட்ட பெண்களும்,ஆண்களும் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர்.
பெரம்பூல் உள்ள அய்யனான் மாமனார் வீட்டில் போலீஸார் விசாரணை செய்தபோது, பாண்டிச்சே, கடலூர் ஆகியஊர்களிலும் இதேபோல, இருவரும் மோசடி செய்ததும், அதன் பிறகு அவர்களை குடும்பத்தை விட்டு விலக்கிவைத்து விட்டதாகவும் அய்யனான் மாமனார் தெவித்தார்.












Click it and Unblock the Notifications