ஈரான் பூகம்பம்: கருணாநிதி இரங்கல்- ரூ. 1 லட்சம் உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர பூகம்பத்திற்கு ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு திமுக தலைவர்கருணாநிதி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். ஈரான் பூகம்ப நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளைசார்பில் ரூ. 1 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர பூகம்பத்திற்கு இதுவரை 25,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பத்திற்குப் பலியானவர்களுக்கு நமது இரங்கல்களையும், கவலை கலந்த பெருமூச்சையும் காற்றோடு சேர்த்துஈரானுக்கு அனுப்பி வைப்போம் என்று அவர் உருக்கமாக கவிதை நடையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், பூகம்ப நிவாரண நிதிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 லட்சத்தை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மூலம் அனுப்பி வைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.முத்துராமனுக்கு முரசொலி விருது:

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு திமுகவின் முரசொலி அறக்கட்டளை விருதுவழங்கப்பட்டுள்ளது.

முரசொலி நாளிதழ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பல்துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைஞர்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2003ம் ஆண்டுக்கான விருதுக்கு மறைந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, திரைப்பட இயக்குனர்எஸ்.பி.முத்துராமன், ஓவியர் செல்லப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+