ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: இலங்கை அமைச்சர்
வேலூர்:
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசிடம் பேசிவருவதாகவும், விரைவில் இப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றும் இலங்கை தோட்டக் கலைத் துறைஅமைச்சர் லட்சுமண் கியல்லா தெரிவித்தார்.
வேலூர் வந்த அவர் அங்கு கட்டப்பட்டுள்ள இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விஜயசிம்மன் நினைவு மணிமண்டபத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் மீன் பிடிப்பது தொடர்பாகவும்,இலங்கை கடற்படையினரால் கடத்தப்படுவது குறித்தும் இலங்கை, இந்திய அரசுகள் பேசி வருகின்றன. மீனவர்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திரும்ப அழைப்பது போல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வேஉள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் மீண்டும் அழைப்போம் என்றார் அவர்.