ஈரான் பூகம்பம்: 25,000 பேர் பலி, 10,000 உடல்கள் மீட்பு
தெஹ்ரான்:
தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 25,000 பேராவதுஇறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 10,000 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஈரான் தொலைக்காட்சி 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 350 பேர் இறந்துள்ளனர் என்றும், பாம் நகரைச் சுற்றியுள்ள,பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எந்த ஒரு மீட்புக் குழுவும் இதுவரை செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி, உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிய 12 மோப்ப நாய்கள் பாம்நகருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கெர்மன் நகரை வந்தடைந்த சுவிஸர்லாந்து நாட்டு மீட்புக் குழுவினரும் பாம்நகருக்கு விரைந்துள்ளனர். அந்தக் குழுவில் மோப்ப நாய்களும் இருக்கின்றன.
இதற்கிடையே மீட்புக் குழு அதிகாரிகளுள் ஒருவரான முகம்மது ஜஹான்ஷகி என்பவர், சடலங்களைக் கட்டிஅனுப்புவதற்கு பைகள் தேவைப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையில் உள்ளதால்,அதே எண்ணிக்கையில் பைகளும் உடனடியாகத் தேவை என்று கூறியுள்ளார்.
இந் நிலையில், உலக நாடுகளின் உதவியை ஈரான் அதிபர் கடாமி கோரியுள்ளார். இஸ்ரேல் தவிர, மற்ற நாடுகள்வழங்கும் உதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ், ரஷ்யா மற்றும்ஜெர்மனி நாடுகள் தங்கள் மீட்புப் படையை அனுப்பி வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications