மார்ச் 10ல் பிளஸ் டூ: ஏப்ரல் 1ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் மார்ச் 10ம் தேதி முதல் பிளஸ் டூ தேர்வுகளும், ஏப்ரல் 1ம் தேதி முதல் பத்தாவது வகுப்புத் தேர்வுகளும்தொடங்கவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 10ம் தேதி பிளஸ் டூதேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் மார்ச் 31 வரை நடக்கும்.அதேபோல, ஏப்ரல் 1ம் தேதி பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. 15ம் தேதி வரை அந்தத் தேர்வுகள்தொடர்ந்து நடக்கும்.இதே தேதியில் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளி தேர்வுகளும் நடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications