செங்கை கோர்ட்டில் நாளை நெடுமாறன் ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு அமர்வு (செஷன்ஸ்)நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் சார்பில் நாளை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கிட்டு குறித்து காவியத் தலைவன் கிட்டு என்றபெயரில் புத்தகம் எழுதியதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மீது ஆலந்தூர் சார்புநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இதில் ஜாமீன் கோ நெடுமாறன் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்புவழங்கப்படவிருந்த நிலையில், நீதிபதி மாற்றப்பட்டு விட்டார். இதைத் தொடர்ந்து பூந்தமல்லி கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நெடுமாறன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து நாளை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நெடுமாறன் சார்பில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தால் நெடுமாறன் உடனடியாக 16 மாதசிறைவாசம் முடிந்து விடுதலை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.