தூத்துக்குடி கலெக்டரிடம் தஞ்சமடைந்த யாழ்ப்பாணம் மீனவர்
தூத்துக்குடி:
இலங்கையைச் சேர்ந்த வாய் பேச முடியாத மீனவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தன்னை அகதியாக சேர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகலிடம் அடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார். வந்தவர் வெள்ளைத்தாள் ஒன்றில் ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி எழுதிக் காட்டினார்.
அதன்படி, அவரது பெயர் டேனியல். வயது 21, வாய் பேச முடியாதவர். இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில்உள்ள யானை இறவு பகுதியைச் சேர்ந்த டெமோஸ் என்பவரின் மகன். மீனவரான டேனியல், பாக்பாய் என்றகப்பலில் பணியாற்றி வந்தார்.
இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வந்தபோது அதில் டேனியலும் பயணம் செய்தார். தூத்துக்குடிதுறைகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தபோது, நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினார். திரும்பி வந்து பார்த்தபோது,கப்பல் புறப்பட்டுப் போய் விட்டது.
கையில் வைத்திருந்த பணத்தை வைத்து 2 நாட்களை தள்ளியுள்ளார். இந் நிலையில் அவரது பாஸ்போர்ட்டும் திருடுபோய் விட்டது. தன்னை அகதியாகக் கருதி அடைக்கலம் தருமாறு எழுதிக் காட்டினார் டேனியல்.
அவரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்ராஜாராமன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications